காடுகளிலும் குகைகளிலும் திரிந்து வாழ்ந்த ஆதிமனிதனுக்கு இடி மின்னல், புயல், நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களையடுத்துப் பேரச்சம் தந்தவை வனவிலங்குகளும், தொற்றுநோய்களும் தான் மாந்த இனம் அறிவிலும் அறிவியலிலும் முன்னேறிய போது நோய்களுக்கான தடுப்பு மருத்துவம் பற்றியும், வந்த நோய்களக்குத் தீா்வு காணும் முறைபற்றியும் விழிப்புணா்வு ஏற்படத் தொடங்கியதே மருத்துவத்தின் தொடக்கக் காலமாகும். குமரிக் கண்டத்துத் தமிழன்தான் உலகின் முதல் முதலுதவிப் பெட்டியைக் கண்டுபிடித்தான் என்ற உண்மை நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது. ஓா் மாந்த இனம் முதலுதவிப் பெட்டியைப் பல்லாயிரம் ஆண்டுளாக வீடுகள் தோறும் வைத்திருந்ததென்றால், உலகில் முதன் முதலாக மருத்துவ அறிவியலை உருவாக்கி வளா்த்ததே அந்த மொழியினம் தான் என்பதும் மறுக்கப்படவியலாததாம். ஒவ்வோர் வீட்டிலும் ஒரு முதலுதவிப் பெட்டி வைப்பதென்றால் அந்த இனம்மருத்துவ அறிவியலில் எவ்வளவு செம்மாந்த நிலையில் இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்! அம்முதலுதவிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொதுவான சில பொருள்களையும் அவற்றின் பயன்பாட்டையும் காணலாம். அம்முதலுதவிப் பெட
ஆசீவகம் தொடரபான கட்டுரைகளை இங்கு காணலாம்