Skip to main content

அறிவா் மரபு கண்ட ஆசு மருத்துவம்

காடுகளிலும் குகைகளிலும் திரிந்து வாழ்ந்த ஆதிமனிதனுக்கு இடி மின்னல், புயல், நில நடுக்கம் போன்ற இயற்கைச் சீற்றங்களையடுத்துப் பேரச்சம் தந்தவை வனவிலங்குகளும், தொற்றுநோய்களும் தான் மாந்த இனம் அறிவிலும் அறிவியலிலும் முன்னேறிய போது நோய்களுக்கான தடுப்பு மருத்துவம் பற்றியும், வந்த நோய்களக்குத் தீா்வு காணும் முறைபற்றியும் விழிப்புணா்வு ஏற்படத் தொடங்கியதே மருத்துவத்தின் தொடக்கக் காலமாகும்.

குமரிக் கண்டத்துத் தமிழன்தான் உலகின் முதல் முதலுதவிப் பெட்டியைக் கண்டுபிடித்தான் என்ற உண்மை நம்மில் பலருக்கு இன்னும் தெரியாது. ஓா் மாந்த இனம் முதலுதவிப் பெட்டியைப் பல்லாயிரம் ஆண்டுளாக வீடுகள் தோறும் வைத்திருந்ததென்றால், உலகில் முதன் முதலாக மருத்துவ அறிவியலை உருவாக்கி வளா்த்ததே அந்த மொழியினம் தான் என்பதும் மறுக்கப்படவியலாததாம். ஒவ்வோர் வீட்டிலும் ஒரு முதலுதவிப் பெட்டி வைப்பதென்றால் அந்த இனம்மருத்துவ அறிவியலில் எவ்வளவு செம்மாந்த நிலையில் இருந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்! 

அம்முதலுதவிப் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பொதுவான சில பொருள்களையும் அவற்றின் பயன்பாட்டையும் காணலாம்.
  1. அம்முதலுதவிப் பெட்டியில் சில மிளகாய்கள் ஒரு கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். ஒருவரைப் பாம்புகடித்துவிட்டதென்றால் இதிலிருந்து ஒரு மிளகாயைச் சுவைக்கத்தருவா். அதன் சுவையைக் கொண்டு எந்தப் பாம்பு அவரைக் கடித்ததென்று அறிந்துகொள்ளலாம் (மிளகாய் புழக்கத்திற்கு வருமுன் இதற்குப் பதில் உப்புக்கல் வைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்திலேயே மிளகாய் பயன்படுத்தப்பட்டது. உப்பும் இவ்வாறே பயன்படும்) 
  2. படிகாரம் ஒரு துண்டு இருக்கும், பாம்புகடிபட்டவருக்குப் படிகாரம் கொஞ்சம் துாள் செய்து வாயில் போட்டால் பாம்பு விடம் நீங்கும். )
  3. ஓா் கம்பளிக் கயிறும் அதனுடன் இருக்கும் பாம்பு நஞ்சைக் கயிறு கட்டி இறுக்க இது உதவும்.
  4. ஓா் குமட்டிக்காய் இதனுடன் இருக்கும். உணவு நஞ்சினால் வயிறு உப்பிசம் கண்டால் உடனே இக்காயை நறுக்கி உள்ளுக்குத் தரப் பேதிகண்டு உணவு நஞ்சு முறிக்கப்படும்.
  5. இதனுடன் எலுமிச்சம் பழமும் இருக்கும். மயக்கம் ஆராட்டம் வாந்தி கண்டவருக்கு இதன் சாற்றினைப் பிழிந்து தருவா்.
  6. இதனுடன் ஒரு சோற்றுக் கற்றாழைச் செடியுமிருக்கும். இச்செடி எளிதில் ஈரம் இழக்காது வெறும் காற்றிலேயே வளரும். வெப்பச் சூலையினால் வயிறு இழுத்துப் பிடித்துக்கொண்டால் இக் கற்றாழையின் மடலிலுள்ள சோற்றினைக் கொடுத்தால் உடனே சரியாகிவிடும்.
  7. இதனுடன் ஒரு சங்குப் பாலாடையும் இருக்கும். ஏனெனில் மூலிகைகளின் சாற்றினை இதில் பிழிந்து நோயாளியின் வாய்க்குள் புகட்ட இதுபயன்படும். சங்குப் பாலாடையில் வைப்பதானல் எந்த மூலிகைச் சாறும் கெடாது. பக்க விளைவுகளும் ஏற்படாது (உலோகங்கள் களிம்பினை ஏற்படுத்தும்).
  8. வெட்டுக் காயங்கள், கட்டி போன்றவற்றை உலோகங்களால் கீறினால் உலோக ஆக்சைடுகள் கிருமித் தொற்றினை உருவாக்குமாதலால் தோலினைக் கீறி மருத்துவம் செய்ய நீளமான முட்கள் கொண்ட ஒரு குச்சியும் இதனுடன் இருக்கும்.
இப்பொழுது புரிகிறதா இந்த முதலுதவிப் பெட்டி எது? என்று. ஆம்! ஒவ்வோர் வீட்டின் முன்னும் தொங்கவிடப்பட்டிருக்கும் திருஷ்டிக்கயிறுதான் அது!

தன் அறிவுக்கு எட்டாதனவும் தனக்குத் தெரியாதனவும் ஆகிய செய்திகளை மூடநம்பிக்கைகள், அறிவுக்கு ஒவ்வாதன என மறுக்கும்பகுத்தறிவு ஒன்று அண்மைக் காலமாகத் தலைவிரித்தாடுவதைப் பார்க்கிறோம். பதிவுபெறாத அறிவு மரபும், எதிர் வரும் காலங்களில் இவ்வாறு நம்மவராலேயே மறுக்கப்படும் அவலம் நமது அறிவு மரபுக்கு நேர்ந்திடும் என்ற எதிர்மறை நம்பிக்கையினாலேயே நமது அறிவா் மரபின் செய்திகள்யாவும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்னும் பேராசிரியா் க.நெடுஞ்செழியன் அவா்களின் அன்புக்கட்டளை, அவையல் கிளவி, மறைகாப்பு, மரபினா் அலாதோர் முன்னிலையில் மொழியாமை எனுந் தடைகளைத்தாண்டி அறிவா்மரபின்செய்திகள் வெகு அண்மைக் காலமாகப் பதியப்படக் கரணியமாயிற்று. அவ்வரிசையில் அறிவா்மரபு கண்ட ஆசு மருத்துவத்தினை எழுத்துவடிவிற்குக் கொண்டு வருகின்றோம். மரபுக்கொப்பச் சிலவாறு சுருங்கவுரைத்துப் பதிகிறோம்.

மிக நீண்டகாலமாகத் தொடா்ந்து வரும் ஒரு மருத்துவமுறை ஏதேனும் சிலகாரணங்களுக்காகக் கையாளப்பட முடியாதபோது, அதற்கு மாற்றாகப் பகரமாகக் கையாளப்படும் மருத்துவ முறைமாற்றுமருத்துவமுறை என வழங்கப்படும். ஆனால் நம் நாட்டிலோவெனின், ஐம்பதாண்டுக்காலமாக ஆதிக்கம் பெற்ற ஓா் மருத்துவமுறைக்கு, மாற்றுமருத்துவமாக, ஐம்பதாயிரம் ஆண்டு தொன்மைமிக்க மருத்துவத்தினைக் காட்டும் விந்தை நகைப்பிற்குரியதே. இன்றைய புரிதலில் உலகெங்கும் மருத்துவம் என்பது யாக்கையினை நோயிலிருநற்து மீட்டுவிடுவதே எனும் பொருள்கொண்டு இயங்குகிறது. ஆனால் நமது முன்னோராகிய அறிவா்களோமருத்துவம் என்பதுநோயினை நீக்குவதோடு நில்லாமல், மீண்டும் அந்நோய் வாராதிருக்கச் செய்தலும் எளிதில் இறப்பினை அணுகாதுகாத்தலும் மருத்துவத்தின் பொருள்மிக்க அடிப்படை என்றனா்.

இத்தகு அறிவா் மரபில் இயல்மாந்தா் பின்பற்றிய மருத்துவ முறையும், அறிவா் இராவணனால் உரைக்கப்பட்டு மருத்துவா்களால் கையாளப்பட்ட சிந்தாமணி மருத்துவமுறையும், ஆசீவகத் துறவியரின் பிறங்கடைகளால் தொடர்ந்து கையாளப்பட்ட ஆசு மருத்துவமும் குறிப்பிடத்தக்கன. இவற்றுள் ஆசு மருத்துவம் பற்றி ஈண்டுக் காண்போம்.

ஒரு துயரா் தன்னை வந்தடைந்தபோதே அவா் இன்னநோயினால் துன்புறுகின்றார் என்பதனை ஓா்ஆசு மருத்துவன் உணரவல்லான். பொதுவாகவே அறிவா் மருத்துவமாகட்டும் தமிழக நாட்டுப்புற மருத்துவமாகட்டும். அவா்கள் துயரரின் கையைப்பிடித்து நாடி பார்த்தே நோயினை அறிய வேண்டும் என்றும், அவ்வாறு நாடி பார்த்து நோய் நாடுபவரே சரியான மருத்துவா் எனவும் ஒரு நம்பிக்கை மக்களிடம் இன்றும்உண்டு. ஆனால் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவே நாடித் துடிப்பினைக் காதால் கேட்கும் கருவி போன்றவை கையாளப்படுகின்றன. அந்தக் கருவியினைக் கையாளும்முறை யாதெனில், ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நாடித்துடிப்பு இயக்கம் நடைபெறுகிறது என்பதனை அறிய, ஓரிரு மாத்திரை நேரம் கூடக்கருவியைினைப் பயன்படுத்தாமல் பத்துமாத்திரை நேரத்திற்குள் உடலில் பன்னிரண்டு முறை இடம் மாற்றிப் பரிசோதிக்கின்றனா். இதனையும் மக்கள் நம்பித்தான் வாழ்கின்றனா். இக்கருவி கண்டறியப்பட்டபோது மூன்று நிமிடத்திறகான நாடித்துடிப்பு கணக்கிடப்படடு அதனை மூன்றால் வகுத்து ஒரு நிமிடத்திற்கான நாடித்தடிப்பினைக் கணக்கிட்டனா். இந்தச் சரியான நடைமுறை இப்போது பின்பற்றப்படுவதில்லை.

தமிழ் மருத்துவம் செய்வதாகக் கூறுபவா்கள் கூட எந்த நேரத்தில் தம்மிடம் நோயா் வந்தாலும், உடனே நாடிபார்த்து மருந்து கொடுக்கின்றனா். இந்தமுறை சரியா? என்பதே நம் கேள்வி? எண்வகைக் குறி குணங்களைக் கொண்டு நோய் நாடலாம் என்பது மரபு. இருப்பினும் அந்த எட்டனுள் சிறப்பாகக் கூறப்படும் “நாடி பார்த்தல்” மக்கள் நம்பிக்கையைப் பெற்ற ஒன்று. ஆனால் மது அருந்தியவன், உறங்கி எழுந்தவன், நடந்து களைத்தவன், கடின வேலை செய்தவன், ஐம்பொறி முயங்கியவன், நீா் மூழ்கி வந்தோன், அதிர்ச்சியுற்றோன், சினங்கொண்டோன், நஞ்சுண்டோன், ஆகியோரின் நாடி நடை இயல்பாயிருக்காது என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. அதனையும் மீறி ஒருவருக்கு நாடி பார்த்துத்தான் நீங்கள் நோய் நாட வேண்டும் என்றால், நீங்கள் நினைத்தபோதெல்லாம் நாடி பார்ப்பதனை அறிவா் மருத்துவம் தடை சொல்கிறது. நாடி பார்க்கப்படும் மாதங்களும் அவற்றில் நாடி பார்க்க வேண்டிய நேரமும் வரையறை செய்யப்பட்டுள்ளன.

”சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதயந் தன்னில் 
அத்தமா மானியாடி யைப்பசி கார்த்திகைக்கு 
மத்தியா னத்திற்பார்க்க மார்கழி தையுமாசி 
வித்தகன் கதிரோன் மேற்கில் விழுகின்ற நேரந்தானே” 

என வரும் வைத்திய ஆனந்தக் களிப்பில்,
  1. சித்திரை வைகாசி மாதங்களில் – கதிர் உதய நேரத்திலும்
  2. ஆனி, ஆடி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் – நண்பகலிலும்
  3. மார்கழி, தை, மாசி ஆகிய திங்கள்களில் – எற்பாட்டிலும் (மாலை)
  4. ஆவணி, புரட்டாசி, பங்குனி ஆகிய மாதங்களில் – நள்ளிரவிலும்
நாடி பார்க்க வேண்டும் என்றொரு பழைய வரையரை இருப்பதனையே இம் மருத்துவா் பலரும்அறியார். அறிந்த சிலரோ அதனைப் பின்பற்றி நடவார். ஆயின் எவன் கொலோவிவா் மருத்துவம் பயின்றது?

இவ்வாறு மரபொற்றி நாடி பார்க்கினும், நோயா்தம் மணிக்கட்டில் நெய்யில் நனைக்கப்பட்ட பாளைச் சீலையினைச் சுற்றிவைத்து, ஓா் மூழ்த்தம் கழித்து அதனையகற்றி, விரல்களை நெட்டிப் பரித்து, உள்ளங் கைகளைச் சூடு பரக்கத் தேய்ப்பித்து, அதன்பின்னர் நாடி பார்க்க வேண்டுவது மரபு. நாடி பார்த்தபின் நாடியைப் பார்த்த மூன்று விரல்களையும் தரையில் தட்டி விடுவது மரபு. யாவரேனும் பின்பற்றுகின்றனரோ? அது நடவாது. ஏனெனில் இவ்வாறு நோய்நாடுதல் நோயர்க்கு மட்டுமே நலம் பயக்கும். மருத்துவரின் “நலங்கள்” பயக்கப்படுமா? எனும் விரைவு கருதிய அச்சமேயாம்!

நாடி பார்க்கும் வரையறை கருதி, பங்குனி மாதம்காலையில் மயங்கி விழுந்த ஒருவனை மருத்துவரிடம் கொண்டு வந்தால், அவனை நான் இன்று நள்ளிரவுதான் நாடி பார்த்து மருத்துவம்செய்வேன் என்று மருத்துவா் அன்று நள்ளிரவு வரை விட்டுவைத்தால் அவன் கதி என்னாவது?

இத்தகு சூழலில்தான் எண்வகைக் குறிகளாலும் அறியப்படமுடியாத நோய் நாடலைச் செய்ய ஆசு மருத்துவம் துணை செய்கிறது. மயங்கினவனின் யாக்கையின் எண்வகைக் குறிகுணங்களும் சரியான நிலையில் இலவாமாதலின், மெய்யியல், ஊழ்கம், சரஊழ்கம், புள்நுால் போன்ற பயிற்சிகளைக் கைவரப் பெற்ற அறிவா்களோவெனின், அத்துயரரின் நோய் நிலையாது? என்பதனை உய்த்தறிவா். யாருடைய யாக்கையினையும் தொடாது சரியான நோய் நாடல்செய்து மருத்துவத்தினை வெற்றிகரமாகச் செய்து முடிக்கும் வல்லமை பெற்றோரை என் கடந்த காலத்தில் அறிவேன். அம்மரபு இன்று அருகிவந்து சற்றொப்ப இறுதி நிலையிலுள்ளதால், இக்கட்டுரைப் பதிவு வேண்டுவதாயிற்று. இம்மருத்துவ மரபின் அடிப்படைக் கூறுகளைச் சுருங்க உரைப்பாம்.

இன்றைய மருத்துவஉலகம் உடலினை முதன்மைப்படுத்திமட்டுமே மருந்தியலை வளர்க்கிறது. அது நிறைவேறாதபோது உளவியிலை நோக்கித் துயரரை அனுப்பிவைக்கிறது. ஆனால் ஆசு மருத்துவமோ ஊழ்க மெய்யியிலை அடிப்பைடையாகக் கொண்டதாகையால், உளவியலுக்கும், உளவியல் அடிப்படையிலான நம்பிக்கை மருத்துவத்திற்கும் இம்மெய்யியல் அடிப்படையிலான தீா்வுகளை முதன்மைப்படுத்துவதாயிற்று. பிறிதொன்றும் நோக்கற்பாலதியாதெனின், இன்றுள்ள பிற மருத்துவ முறைகள் பிணியுற்றான் கூறும் கருத்துக்கோ, அல்லது மருத்துவம் செய்பவனின் முடிவுக்கோ ஒப்ப மருத்துவம் செய்யாது, துயரரை ஆய்வுசெய்யுமோர் கருவியின் தீா்ப்புக் கொப்பவே மருத்துவம் செய்யப்படும் அவலம் கண்கூடு. இதில் பிழைபட உணரப்பட்டநோய்க்குச் செய்யப்படும் மருத்துவம் துயரருக்குத் தீா்வாகைாமையின், அத்துயரதா் மனநல மருத்துவரை நோக்கி அனுப்பப்படும் இழிவும் வெளிப்படை. ஆசு மருத்துவம் யாக்கையின் கட்டுமானத்திற்கானமருத்துவமாக மட்டும் அமையாது, அறிவு, மனம் எனும் அந்தக் கரணியங்களையும் ஏதுக்களாக்கி, முற்றும் மலத்தினீங்கா உடலையும், மலத்தினீங்கிய அறிவையும், மலத்தின் நீங்கியும் நீங்கா மனத்தினையும் ஒருங்கிணைத்தே உயிர்ப்புள்ள ஒருங்கமைவு ஒன்றினைப் பின்வரும் பதினெட்டு மண்டலங்களாகப் பிரிக்கிறது.

அப்பகுப்பினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்
அவையாவன:-
  1. என்பு மண்டலம்
  2. என்பீற்று மண்டலம் (நகம், குருத்தென்பு)
  3. நரம்பு மண்டலம்
  4. குருதி மண்டலம்
  5. தசை மண்டலம்
  6. தோல் (தொடுவுணா்) மண்டலம்
  7. உணவு மண்டலம்
  8. சுரப்பி மண்டலம்
  9. கழிவு மண்டலம்
  10. இனப்பெருக்க மண்டலம்
  11. நிண மண்டலம்
  12. நீா் மண்டலம்
  13. திரிவாக்க மண்டலம
  14. மனம்
  15. இன்மையிலுண்மை மண்டலம்
  16. ஆளுமை மண்டலம்
  17. வளிச் செயல் மண்டலம்
  18. மெய்யியல் மண்டலம்
1. என்பு மண்டலம்

என்பு மற்றும் மூட்டுக்கள், அம்மூட்டின் கண்ணியைந்த உயவு, கீல்கள் போன்றவை இத்தொகுதியின் கண்ணடிக்கும் என்புமுறிவு, மூட்டு நழுவுதல் நீல்வாயுப்பிடிப்பு, உயவு உலர்தல் மற்றம்என்புப் புற்று மச்சையாக்கம் போன்ற மருத்துவங்கள் தொடர்பான செய்திகள் மற்றம் நடைமுறைகள்.

2. என்பீற்று மண்டலம்

விரல்நுனிகள், நகங்கள் மற்றும் குருத்தென்பு இவற்றுடன்இவற்றின் கண்ணமைந்த வர்ம ஒடி முறிவு மற்றும் இளக்கம் தொடா்பான மருத்துவம் மற்றும் தொடுவா்மம் சார்ந்த மருத்துவ முறைகள் இப்பிரிவிலடங்கம்.

3. நரம்பு மண்டலம்

யாக்கையின் தொழிற்பாட்டிலேற்படும் முடக்கம், வர்மசந்திகளில் ஏற்படும் தாக்குதல்கள் மற்றும் மூளையின் செயற்பாடுகள் ஆகியவற்றையும், அவை சார்ந்த மருத்துவ நடைமுறைகளும் இதன் கண்ணேயடங்கும்.

4. குருதி மண்டலம்

இதயத்தினின்றும் குருதி பீச்சப்பட்டு யாக்கை முழுதும் பரவி மீண்டும் திரும்பிவந்து உயிர் வளியினை உள்வாங்கி மீண்டும் பரவிச் செல்லுமாதலால் இச்செயல் சார்ந்த கருவிகளும், உறுப்புக்களும் இம்மண்டலத்துள்ளடங்கும். அரத்தசோகை, அரத்தபித்தம், நஞ்சு, நஞ்சு முறிவு மருத்துவ முறைகள் இதிலடங்கும்.

5. தசை மண்டலம்

இயங்கு தசைகள் தவிர்த்த இயக்கு தசைகளான யாக்கையின்பலவிடத்தும்தசை நாண்களால் தொடுக்கப்பெற்றுப் பழுவென்புகளின்மீது அமையப்பெற்ற தசைமற்றம்தசை நார்கள், இவற்றின்காண் ஏற்படும் வெட்டுக்காயம், வீக்கம், புண்கள், புழுத்தாக்கு, கட்டிகள், புரைகள் தொடா்பான மருத்துவமுறை இதிலடங்குவதாம்.

6. புறத்தோல் மண்டலம்

யாக்கையின் புறப்பரப்பில் போர்த்தப்பட்டுள்ள நுண்புழைகள் கொண்டதும் சிறு மயிர்க் கால்கள் கொண்டதுமான இத்தோல் மாந்தருக்குப் புறச்சூழலையும், தொடு உணா்வினையும் அறிவித்து நிற்பதாம். உணர்திறன் நரம்புகள், வியா்ப்பித்தல், மற்றும்பொதுநிலை மருத்துவங்கள் இதிலடங்கும்.

7. உணவு மண்டலம்

உண்ணுந் தொழிற்குதவிய வாய், பல், நாக்கு, தொண்டை, உணவுக் குழல், இரைப்பை, குடல் நுதலிய துணையுறுப்புக்கள் தொடா்பான மருத்துவமும், உணவு செரியாமை, பசியின்னை, சுவையறிதலின்மை போன்ற மருத்துவங்களையுள்ளடக்கியதாம்.

8. சுரப்பி மண்டலம்

உணவு செரிப்பு, உடல் வளா்ச்சி, நோய் எதிர்ப்பு, உடலின் வெப்பநிலைச் சமன்பாடு, சிந்தனை செயல்பாடு ஆகியவற்றுக்காதாரமான நீா்களைச் சுரக்கவல்ல சுரப்பிகள், உமிழ்நீா்ச்சுரப்பி, இரைப்பை நீா், கணைய நீா் போன்ற சுரப்பிகளின் மருத்துவமும் இதிலடங்கும்.

9. கழிவு மண்டலம்

மலக்குடல், குதம், வியா்வைச் சுரப்பிகள், சிறுநீா்த் தடங்கள், சிறுநீரகம், (நீரிழிவு மூலம் போன்றவையும்) தொடா்பான மருத்துவம் சார்ந்தது.

10. இனப் பெருக்க மண்டலம்

கருப்பை, கருவறை, பாலுறுப்புக்கள், விந்தகம், குறியுறுப்புக்கள், ஆண்மைத்தன்மை, மலடு, உறவு நாட்டம் தொடா்பான மருத்துவ முறைகள்.

11. நிண மண்டலம்

யாக்கையின் இயக்கத்திற்குத் தேவையான வெப்பத்தினைத் தரவேண்டி உடலில் ஆங்காங்கே சேமிக்கப்படும் கொழுப்பு மற்றும் குடல்சார்ந்த கொழுப்புக்கள் இவற்றின் தேக்கம் மற்றும் நீக்கம் தொடா்பான மருத்துவம்.

12. நீா் மண்டலம்

உடலின் கண்ணாங்காங்கு நின்று பயன்படும் நீா்பபொருள்களையும் மற்றும் தேவையற்றுத் தேங்கிநின்று உடலைப் பருக்கச் செய்யும் நீா்பற்றியதும், சிறுநீா் தவிர்த்த உப்புத் தன்மைகளையும் பற்றிய மருத்துவம்.

13. திரிவாக்க மண்டலம்

மிகுந்து வரும் முக்குற்றங்களால் ஏற்படும் நரை, திரை, மூப்பு மற்றும் தளர்வுகளைப் பற்றிய வளி, அழல், ஐயச் செயல்பாடுகளைக் குறித்த மருத்துவம்.

14. மனம்

பருப்பொருளான உடலினை ஆட்டுவிக்கும் அருவமான மனம் பற்றிய நுண்ணறிவு மருத்துவம். சித்தப்பிரமை எனப்படும் மனநோய், மற்றும் மறதி சார்புடைய மருத்துவம் மற்றும் கவனகம் சார்ந்த செய்திகள்.

15. இன்மையிலுண்மை மண்டலம்

இன்மையாகிய கற்பனை, கனவு ஆகியவற்றில் விழிப்பு நிலையிலும்,உறக்க நிலையிலும், அரையுறக்க நிலையிலும் தன் மனலோட்டங்களுக்குத் தக்கவாறு நடந்துகொள்ளம், அதனை உண்மையென நம்பும் பேராசை, மனம் சார்ந்த மருத்துவம், பொய் பேசுதுல், மூடநம்பிக்கைகள், பேராசை போன்ற பெரும் கேட்டினைச் சார்ந்த உளவியல் மற்றும் நம்பிக்கை மருத்துவம்.

16. ஆளுமை மண்டலம்

அறிவினைக் கொண்டு தன்னாளுமை நடத்தும் திறன், தனித் திறன்கள், நற்பண்புகள், தவற்றினை உணர்ந்துகொள்ளல் போன்ற மாற்றத்தக்க மாற்றத்தினை ஏற்றுக்கொள்ளும் மனநலம் சார்ந்த – தன்னை ஊக்கிக்கொள்ளும் ஊக்கம் சார்ந்த மனநல மருத்துவம், உடல், மனம், அறிவு, நன்மை, தீமை எனும் பலவற்றையும் உணர்த்தலும், ஒருங்கிணைத்து வாழ்வதுமாய் செயல்பாடுகள் தொடா்பானது.

17. வளி மண்டலம்

நாசிப்புழை, வளிக்குழல், நுரையீரல், வளியறைகள் தொடா்பானதும், உயிர் வளியினை உடலுக்குள் செலுத்தத் தேவையான செயற்பாடுகளையும், அச்செயல்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் மூச்சுக் குழல் பாதையின் நோய்கள் மற்றும் மூச்சடைப்பு தொடா்பானது. இம்மட்டோடன்றி ஊழ்கம் பயிலுகையில் நாசிப் புழைகளின் கண் வளியோட்டம் மாறிச் செல்லவேண்டிய ஒழுக்கங்கள் பற்றியது – ஒழுங்கு தப்பிய மூச்சோட்டத்தால் ஏற்படும் தீமைகள், மரணம் முதலியவற்றைத் தவிர்ப்பது சார்ந்த மருத்துவம்.

18. மெய்யியல் மண்டலம்

பிற மருத்துவ முறைகள் உடலினை உயிர் வாழ்வதற்குரிய கருவியாக மட்டுமே பார்க்கின்ற வேளையில் அறிவா் மரபோ உடலினை அதற்கும் மேலாக, அதாவது வீடுபேறுடைவதற்குத் துணை நிற்கும் ஊடகமாகக்கருதியதால் ஊழ்க மெய்யியலுக்கும், வீடுபேறுடைதலுக்குமான செயற்பாடுகளுக்குத் தடையேற்படுத்தும் கரணியங்களைத் தாங்கள் நன்கு அவதானித்து அத்தடைகள்னீங்கி ஊழ்கம் பயின்று வீடுபேறடையத்தக்கதாய் உணவு மற்றும் பயிற்சி முறைகளை வகுத்தனா். இத்தகு பயிற்சிகளில் ஏற்படும்தவறுகள், தோல்விகட்கும், நோய்களுக்கும் கரணியமாம் வாய்ப்புளதாதலின் இதனைக் களையுமுகத்தான் ஏற்படுத்திய நடைமுறைகளை உள்ளடக்கிய மருத்துவ முறைகளைக் கூறும் பகுதியாகும் இது. முதுகுத் தண்டு, மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபுரகம், அநாகதம், விசுத்தி, ஆக்கினை, சகத்திரதளம் எனும் சக்கரங்கள், அவற்றின் கண் உயிர் வளியின் தொழிற்பாடு மற்றும் அவ்விடங்களில் தோன்றும் உடல் மற்றும் மனத்திற்கான தளா்வு நிலைகளை இப்பகுதி ஆய்ந்துரைக்கும்

அறிவா் மரபும் பதினட்டும்மிக்க தொடா்புடையன. அறிவா் மரபினைப் பதிணெண்மராகக் காட்டும்மரபும்நம்மிடையே உண்டு. அறிவா்மரபின் படிநிலைகளும் பதினெட்டு. மேற்கணக்கு நுால்களும் பதினெட்டு, கீழ்க்கணக்கு நுால்களும் பதினெட்டு, மெய்யியல் மண்டலத்தில் விளையும் நோய்களைப் பார்க்கில் இதுவும் பொருந்துகிறது. கீழ் மூலாதாரம் எனப்படும் முதுகுத்தண்டினின்றும் நாபியினைப்பிணைக்கும் குறிநரம்பின் மீது தோன்றும் பவுந்திரம் என்னும் கட்டியானது ஒன்றன்பின் ஒன்றாகப் பதினெட்டு கட்டிகள் தோன்றும். மேல் மூலாதாரத்துக்கும் மூச்சுக்குழலுக்கும் இணைப்புதரும் கண்டத்தில் தோன்றும் கண்டமாலையிலும் பதினெட்டுக் கட்டிகள் தோன்றுவதும் விந்தையாகவே உள்ளது. இவ்விரு வகைகளிலும் பதினேழு கட்டிகளுக்குள் அதனைத் தீா்க்காவிடில் பதினெட்டாம் கட்டி மாந்தா்க்கிறுதியாய் அமைந்துவிடுதலும் நோக்கத்தகும்.

அறிவா் கூறும் பதினெட்டு மண்டலங்களின் சுருக்கம் விரித்துப் பார்த்துப் படிக்கத் தக்கதாம்.

பிற மருத்துவ முறைகள் நம்மிடம் கலவாதபோது, கண்போன்ற நுண்ணுறுப்புகளில் தைக்கப் பெற்ற முள் போன்றவற்றை எடுக்க அப்போதும்வலியுணரா மருத்துவம் செய்யப் பட்டதென்று சொன்னால் நமக்கு வியப்பாகவே இருக்கும். அரசர்களின் படையெடுப்புக்கள் நிகழ்ந்த காலத்தே முதனாட்போரில் வாட்புண்ணுற்ற வீரர்கள் இரவு மருத்துவம் செய்துகொண்டு மறுநாள் மீண்டும் போருக்குச் செல்வா். அப்படியாயின் ஓா் இரவுப் போதுக்குள் அவா் தம் வலியும் வெட்டுக்காயமும் சரிப்படுத்தப்பட்டுவிடும். என்ன வியப்படைகிறீா்களா? ஆம். அன்றைய மருத்துவா்கள் நத்தைச் சூரி எனும் மூலிகையின் வேரை வலியுணா்வு நீக்கியாகப் பயன்படுத்தினா். இன்று அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மயக்கமருந்துகள் வலியுணா்வோடுமனிதனின் உணா்வுநிலை அறிவையும் இல்லாது செய்து மயக்கமுறச் செய்கின்றன. ஆனால் பழங்கால மருத்துவ முறையில் வலிமட்டும் இராது மனிதனின் அறிவு நிலை விழிப்பிலேயே இருக்கும். மகப்பேறு காலப் பெண்களுக்கும் வலியுணரா மருந்துகள் பயன்படுத்தப்பட்டன. தீக்காயங்களின் எரிச்சலைப்போக்கவும் வலியுணரா மூலிகைகளைப் பண்டை மருத்துவா்கள் பயன்படுத்தினா் என்பது நம் மரபு வழிப் பதிவு. இன்றும் அம்மருத்துவ முறைகளை நாம் நடைமுறையில் கையாடி வருகிறோம். நம்மாள்வார்களின் ஐயய்களைதல் அமா்வில் நேரில் நிறுவப்பட்டதாகும்.

உயிர் அடக்கமும், உயிர் பிரிதலும்

வர்மமுடிச்சுக்களில் தாக்கப்பட்டோர், நஞ்சுக் கடியுற்றோர், மரத்திலிருந்து கீழே விழுந்தோர், தண்ணீரில் அமிழ்ந்தோர் ஆகியோர்தம் உயிரானது உடலை விட்டுப் பிரியுமுன் சிறிது நேரம் அடங்கியிருக்கும். அதாவது உயிர்ச்செயல்பாடுகள் அடங்கிப் பிணம்போல் தோற்றுவா். ஆயினும் அவ்வுடலுக்குள் உயிர் இருக்கும். அறிவா் மருத்துவத்தில் சிறந்தோர் அவ்வுடலை ஆய்வு செய்யும்போது விரல்களில் நெட்டிபரியாவிட்டால் உயிர் பிரிந்ததென்றும் அறிவர். விழியானது மேல்நோக்கியோ, கீழ் நோக்கியோ, பக்கவாட்டிலோ, ஒதுங்கிய பார்வையாய் இருப்பின் உயிர் அடங்கியிருக்கிறதென்றும், விழி நேராகப் பார்த்தால் உயிர் பிரிந்ததாகவும், அறியலாம். அவ்வுடலினைத் தண்ணீரில் வைத்தால் நீருக்குள் ஆழ்ந்தால் உயிர் உள்ளதென்றம், நீரில் மிதந்தால் உயிர் பிரிந்ததென்றும் அறியலாம்.

இவ்வாறு உயிர் அடங்கியிருப்போரை மீண்டெழக் கூடிய நிலையில் உயிர்ப்பிக்கும் மருத்துவ முறைக்குக் குடோரி மருத்துவம் என்று பெயர். மயங்கிவிழுந்த யாருக்கேனும் முதலுதவி செய்யும்போது, சுக்கு வைத்து ஊதுகிறாயா? எனக் கேட்கும் வழக்கம் இன்றும்நம்மிடையே உண்டு. வெள்ளெருக்கம் பாலில் ஊறவைத்த சுக்கை நன்கு அரைத்துத் துாளாக்கிக் துணியால் வடிகட்டிப் பேய்ச்சுரைக்குடுக்கையில் வைத்திருந்து அதனை மயங்கினவா் நாசியில் வைத்து ஊதும், குடோரிமுறைகளுள் ஒன்றான மருத்துவத்தையே இது குறிக்கும்.

பல காலும் சுருங்கி அருகிப்போன ஓா்பெரிய அறிவியல் மரபினை ஒரு சிறு கட்டுரைக்குள் அடைக்க இயலாதாகையின், இவ்வளவிலே தொட்டுக் காட்டிய அறிவு மரபினைப் பேணி விழுப்பம் பெற நமது பிறங்கடைகளுக்கு வழிகாட்டி நடத்த வேண்டி அமைகிறேன். நன்றி!

Comments

Unknown said…
கருவிகள் கண்டறியும் நோய்க்கு மருந்தளிக்கவே , 5 ஆண்டுகள் படிக்க வேண்டியுள்ளது. மனிதத்திற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தவம் புரியவே தூண்டினாலும், இக்காலத்தில் கற்பிப்பவர் யார்?... ஆராய்ச்சிகள் நம் பெருமைகளை மீட்டெடுத்தாலும் மருத்துவம் போன்ற நுணுக்கங்கள் அழிந்தது அழிந்ததுதான் இல்லையா?

Popular posts from this blog

ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்

முனைவர் க. நெடுஞ்செழியன் அணிந்துரை இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆசீவகம் பற்றி அறிந்திருந்தவர்கள் தமிழகத்தில் ஒரு சிலரே. அவர்களும் சைன சமயத்தின் ஒரு பிரிவாகவே ஆசீவகத்தைக் கருதினர். ஆசீவகம் பற்றி வடநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் வெளிநாட்டு அறிஞர்கள் ஒரு சிலரும் ஆராயத் தொடங்கினர். ஆயினும் அவர்களால் பெரிய அளவு வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில் 1950களின் தொடக்கத்தில் ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர் ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம் ஆவார். ஆசீவகம் பற்றி ஆய்ந்த பலரும் ஆசீவகத்தின் சுவடுகளை பாலி, பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடினர். அவை யாவும் ஆசீவகத்தை எதிர்த்தவர்களின் கருத்துக்களாகும். தருக்கவியலில் இதனை ‘அயலார் கூற்று’ என்பர். நன்னூலார் ‘பிறர் மதம் கூறல்’ என்பார். மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி, தமிழ் இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டவர் ஏ.எல்.பாசம் ஒருவரே ஆவார். ‘ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்தியச் சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்ட ஏ.எல். பாசம், ஆசீவகத்

ஆதித் தமிழர் மெய்யியல் - ஆதி. சங்கரன்

ஆதித் தமிழர் மெய்யியல் ஆதி. சங்கரன் முதன்முதலாக உலக மாந்தர்க்கு - மாந்தத் தொகுதிகட்கு - அறிவியல், மெய்யியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களைத் தகுந்த தருக்க நெறிகளோடு படைத்து வழங்கிய முதல் மாந்தன் குமரிக் கண்டத்துத் தமிழனே என்பதற்குப் பலவகைச் சான்றுகளும் மேற்கோள்களும் இருப்பினும் அவற்றைச் சரியான முன்வைப்பு முறையில் தெளிவு படுத்த வேண்டியது நமது கடனேயாம். எனவே, ஆதித் தமிழரின் மெய்யியல் கோட்பாடுகளையும், அவை வழங்கி வந்த பல்வேறு நிலத்திணையிலிருந்து இன்று அடைந்துள்ள திரிவாக்க வளர்ச்சி பற்றியும், குமுகத்தில் இன்று அக் கோட்பாட்டிற்கு உள்ள இயங்கியல் நிலை குறித்தும் குமுகத்தின் பார்வையில் இப்பழம் பெரும் மெய்யியல் அறிவு இன்றைக்கு எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பது பற்றியும், இன்றைய நிலையில் அக்கோட்பாடு பெற்றுள்ள வரைவு மற்றும் சமயப் போர்வைகள் குறித்தும் பண்டைய செய்திகளைத் தற்போதைய நடைமுறையுடன் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்பும் நமதேயாம். பழந்தமிழர் தம் வாழ்க்கையிலிருந்து மெய்யியல் கோட்பாடுகளை நாம் பின்வரும் பகுப்புக்களில் எடுத்துரைக்கலாம். 1. இடத்திணையின் அடிப்படையில் முன்வைத்தல். 2. ம

ஐயனார் தந்த ஐகாரமும் ஐகாரம் தந்த வள்ளுவரும்

தமிழ் மொழியின் உயிரெழுத்துக்களிலேயே ஐகாரமும் ஔகாரமும் தனிச் சிறப்புடையன. எழுத்துப் பாலியலில் பெண் எழுத்துக்களாகக் கருதப்படும் இவையே ஊழ்க மெய்யியலில் (யோகம்) முதன்மையான இடத்தைப் பெற்றவை. தமிழின் பிற எழுத்துக்கள் மொழிக்கு இலக்கணம் கூறும்காலை, இவ்வெழுத்துக்கள் மெய்யியலுக்கு இலக்கணம் கூற வல்லவை. இவற்றுள் ஐகாரம் என்பது சூரிய, சந்திர கலைகளின் இயைபினாற் தோன்றும் சுழுமுனை என்னும் கலையினையும், நாடிகளில் சேட்டுமம் என்னும் நாடியையும் குறிக்கும். ஐயம் என்னும் சொல் சேட்டுமத்தைக் குறிப்பதாகும். ஐயம் > ஐ+ய்+அம் ஐ - பகுதி ய் - உடம்படுமெய் அம் - விகுதி ஐயம் என்பது ஆண்நாடியா அல்லது பெண் நாடியா எனப் பகுத்தறிய இயலாத நிலையினை உணர்த்துவதாம். இரு பொருளின் மயக்குத் தோற்றமாம் நிலையினை ‘ஐயம்’ (ஐயுறவு) எனக் குறிப்பதும் இதனடியில் எழுந்ததேயாம். இந்த ஐய நிலை கைவரப் பெற்ற ஊழ்க மெய்யியலில் முதிர்ந்தோரையே ஐயன் எனவும் ஐயனார் எனவும் வழங்கும் வழக்கம் தோன்றியது. ஐயன் > ஐ+ய்+அன் ஐ - பகுதி ய் - உடம்படுமெய் அன் - ஒருமை ஆண்பால் விகுதி இவ்வாறு ஊழ்க மெய்யியலில் இறுதி நிலை கைவரப் பெற்ற ஆசீவகத் துறவிகளே ஐயனார் எ